முசிறி அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்

முசிறி, மே20:முசிறி அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேம் நேற்று விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருச்சி மாவட்டம் முசிறியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து வருதல், தீர்த்த குடம் எடுத்தல், யாக வேள்வி, வேதபாராயணம், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோயில் கோபுர கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். கும்பாபிஷேக விழாவில் திண்டுக்கல் அங்கு விலாஸ் முத்தையா கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீரை பெற்று அங்காளம்மன் சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.

 

The post முசிறி அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: