தேவதானப்பட்டி, டிச. 12: தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெற்பயிரில் புழு தாக்குதல் அதிகரித்து வருகிறது. தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நேரடி நெல் விதைப்பு செய்து ஒரு மாதமான நிலையில் நெற்பயிர்கள் உள்ளன. தற்போது கடுமையான பனி நிலவுவதால் புழு தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது.