தண்ணீரை திருடும் கருவேலம் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்

அவனியாபுரம், டிச.12: மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது என்று, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.  மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘உச்சநீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. 100 சதவீதம் உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். உள்ளாட்சித் தேர்தலில் பதவிகள் ஏல விற்பனை செய்வது தொடர்பாக எழுந்த புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தினகரன் பலமுறை போட்டியிட்டு எங்களிடம் தோல்வியுற்றுள்ளார். தொடர்ந்து தோல்வியை மக்கள் தினகரனுக்கு பரிசாக அளிப்பார்கள். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அதிமுக முழுமையாக ஆதரிக்கிறது. அதிமுக எப்பொழுதுமே நாடகமாக அரசியலை பயன்படுத்துவதில்லை. நல்லதை மக்களுக்கு செய்வோம். தேனி மக்களவை தேர்தல் வழக்கு சட்டபூர்வமாக நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. எந்த வழக்காக இருந்தாலும் எதிர்கொள்வோம். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது’’ என்று தெரிவித்தார்.

Related Stories: