சீர்காழி, டிச.11:சீர்காழி நகராட்சி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 7 மாடுகளை பிடித்து அப்புறப்படுத்தப்பட்டது.சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் அதிகளவில் சுற்றி திரிந்து வந்ததால் விபத்துக்கள் அடிக்கடி நடந்து வந்தன. சில சமயங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து வந்தன. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் பொறுப்பு வசந்தன் சாலைகளில் மாடுகளை திரிய விட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் பெரும்பாலான மாடுகள் வளர்ப்போர் மாடுகளை வீடுகளில் வைத்து பராமரிக்காமல் சாலைகளில் திரிய விட்டு வந்தனர்.