மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பட்டம், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

காஞ்சிபுரம், டிச.11: காஞ்சி கலெக்டர் பொன்னையா  வெளியிட்ட அறிக்கை. தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டம், பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இதையொட்டி, குடும்ப ஆண்டு வருமானம் ₹2 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ₹2 லட்சம் வரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வி உதவித்தொகைக்கான வின்ணப்பம் குறித்து தகுதி மற்றும் விருப்பம் உள்ள மாணவர்கள் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: