புதுக்கோட்டை, டிச. 11: புதுக்கோட்டை அருகே போடம்மாள்புரத்தில் விவசாய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வங்கிக்கு செல்லும் பாதையை மாதக்கணக்கில் சேதமடைந்த நிலையிலேயே உள்ளது. மேலும் அண்மையில் பெய்த தொடர்மழையால் இவ்வங்கிக்கு செல்லும் மேலும் உருக்குலைந்ததோடு சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் விவசாயிகள் உள்ளிட்ட பல்ேவறு தர்ப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வங்கிக்கு செல்லும் விவசாயிகள், விவசாயத்திற்கான உரங்களை இருசக்கர வாகனத்தில் கொண்டுசெல்லும் போது கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உர மூட்டை ஏற்றப்பட்ட பைக்கில் ஏற்றிவரும்போது, சேறும், சகதியுமான சாலையில் வழுக்கி கீழே விழும் அபாயம் நிலவுகிறது.