தேனி, டிச.10: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி தேனி நகரில் ஆங்காங்கே தள்ளுவண்டிகளில் அகல் விளக்குகள் விற்பனை அமோகமாக நடந்தது. தமிழர்களின் பாரம்பரிய விழாவாக கார்த்திகை தீபத்திருநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய திருநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இன்று இரவு வீட்டு வாசலில் அகல் விளக்குகளில் எண்ணெயிட்டு திரி ஏற்றி தீபம் ஏற்றுவது வழக்கம். இத்தகைய திருவிழாவிற்கான அகல் விளக்குகள் விற்பனை தேனி நகரில் குயவர்பாளையம், பங்களாமேடு, நேரு சிலை, கான்வென்ட், அல்லிநரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இதற்காக தள்ளுவண்டிகளில் வைத்து 5 அகல்விளக்குகள் ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டது.