சாத்தான்குளம், நவ.27: சாத்தான்குளம் அருகே கீழகருங்கடல் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து மகன் மோகன்ராஜ்(32). தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. தம்பதிக்கு 4 மாத கைக்குழந்தை உள்ளது. மோகன்ராஜிக்கு, கடந்த 5 ஆண்டாக காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மூளைக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதற்காக நெல்லை அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் பாதிப்பு குறையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். தகவலறிந்து சாத்தான்குளம் எஸ்.ஐ. சத்தியபாமா மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கூந்தன்குளம் மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் முருகன் என்ற முருகேசன்(32). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். முருகேசன், பேய்க்குளத்தில் மனைவியின் பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து ஆடு வளர்த்து வந்ததுடன் கூலி வேலைக்கும் சென்று வந்தார்.