வலங்கைமான், நவ.22: வலங்கைமான் வட்டார விவசாயிகள் உரிய நேரத்தில் களைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் இடும் உரம் முழுவதும் பயிருக்கே கிடைக்கும் என வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்ரமணியன் தனது செய்தி குறிப்பில் செய்தி குறிப்பில் கூறியதாவது:
நெல்லில் களை நிர்வாகம் என்பது நாம் சாகுபடி செய்துள்ள தனிப்பயிரில், அதாவது நெல் வயலில் நெல்லைத் தவிர தோன்றும் அனைத்து வகையான செடிகளும் களைகள் ஆகும். இதனை அகற்றி பயிரை காப்பதுதான் களை நிர்வாகம் என்பதாகும். நாம் சாகுபடி செய்துள்ள நெல் வயலில் கூடவே களைகளும் முளைத்திடும். அவை நெல்லுடன் போட்டி போட்டுக்கொண்டு ஏற்கனவே நிலத்திலிருக்கும் சத்துக்களை எடுப்பதுடன் நாம் இடும் அடியுரம் மற்றும் மேலுரம் இவற்றையும் அதிக அளவில் எடுத்துக்கொண்டு களைகள் நன்றாக வளர்வதுடன் நெல் பயிருக்கு கிடைக்க வேண்டிய உரம் மற்றும் இதர சத்துக்களும் கிடைக்காமல் போகிறது. மேலும் சூரிய வெளிச்சம், காற்றோட்டம், இவைகளும் நெல் பயிருக்கு கிடைப்பது தடையாகிறது. களைகள் பூச்சி மற்றும் நோய்களின் இருப்பிடமாகவும் இருக்கிறது.