கொள்ளிடம், நவ.22: கொள்ளிடத்தில் 7 வருடமாகப் மூடியே கிடந்த வேளாண் உதவி இயக்குநர் அலுவலக கேட் நேற்று தினகரன் செய்தி எதிரொலியால் திறக்கப்பட்டது. கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்துக்குச் செல்லும் நுழைவாயில் கேட் கடந்த 7 வருடங்களாக பூட்டப்பட்டு மூடியே கிடந்தது. இதனால் விவசாயிகள் அலுவலகத்துக்கு எளிதில் சென்று வர முடியவில்லை. உரம், மற்றும் விதைகள், பூச்சிமருந்துகளை எளிதில் சென்று வாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். வேளாண் கிடங்குக்கு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்படும் வேளாண் இடுபொருட்கள் மற்றும் நெல் விதை மற்றும் உரமூட்டைகளையும், கிடங்குக்கு எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இது குறித்து விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் சார்பில் கோரிக்கை விடுத்தும் நுழைவாயில் கேட் திறக்கவில்லை.