திட்டக்குடி, நவ. 22: வடிகால் கால்வாயை தூர்வார கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.ராமநத்தத்தை அடுத்துள்ள தச்சூர் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த வடிகால் கால்வாய் தூர்வாரப்படாததால் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையால், மழைநீர் கழிவுநீருடன் கலந்து அப்பகுதி தெருவில் தேங்கி நிற்கிறது.இதனால் அந்த பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலை இருப்பதால் அப்பகுதி மக்கள் இந்த பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.