ஸ்ரீபெரும்புதூர், நவ. 20: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் குண்ணம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் காலனியில் மட்டும் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 100க்கும் மேற்பட்ட அதிகமான கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். இப்பகுதியில் கருமாதி குளம் உள்ளது. இங்குள்ள கருமாதி குளம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்களின் பயன்பாட்டுக்கும், கால்நடைகள் குடிநீர் தேவைக்காகவும் பயன்பட்டது. மேலும், காலனி பகுதியை சேர்ந்த யாரேனும் இறந்தால், இந்த குளக்கரையின் மீது ஈமச்சடங்கு நடத்தப்படுகிறது. ஈமச்சடங்கு முடிந்தவுடன் பொதுமக்கள் இந்த குளத்தில் குளிக்கின்றனர்.