திருத்துறைப்பூண்டி, நவ.12:
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் நேரடி நெல் விதைப்பில் 35000 ஏக்கரும், சம்பா நடவில் 2000 ஏக்கரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்து வந்த மழையினால் நெற்பயிர் வளர்ச்சி நன்றாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக மழை இல்லாததாலும் பகலில் அதிக வெப்பமும், இரவில் பனிப்பொழிவும் இருப்பதாலும் பயிரின் தோகைகள் வெளிர் நிறத்திலும், பாக்டீரியா இலைக்கருகல் நோயின் தாக்குதலும் துவங்கி உள்ளது. ஆற்றிலும் நீர் வரத்து குறைந்துள்ள நிலையில், சம்பா பயிர்களுக்கு நீர் பாய்ச்சி உரமிட வேண்டிய தருணத்தில் நெற்பயிர்கள் இருப்பதால் ஆயில் என்ஜின் மூலம் வாய்க்காலிருந்து நீர் இறைக்க வேண்டிய சுழ்நிலை உள்ளது.