நீடாமங்கலம், நவ.6: நீடாமங்கலம் அருகில் உள்ள காஞ்சிகுடிகாடு கிராமத்தில் தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளிடம் அசோலா தயாரிக்கும் முறை பற்றிய செயல் விளக்கம் அளித்தனர்.அசோலா வளர்ப்பதற்கு உகந்த இடங்கள் மர நிழலில் (நேரடி சூரிய ஒளிஒரு நாளைக்கு 3 மணிநேரத்திற்கு மேல் இருக்க கூடாது) அசோலா தயாரிக்கும் இடத்தினை தேர்வு செய்ய வேண்டும்.இடத்தின் அளவு 6க்கு 3 இருக்க வேண்டும். களை செடிகளை அகற்றி இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். இடம் குண்டும் குழியுமாக இல்லாமல் சம தளமாக இருக்க வேண்டும்.அசோலா வளர்க்கும் முறை: செங்கலை குறுக்கு வாட்டில் தயார் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் வைக்க வேண்டும். அதன் மேல் சில்பாலின் பாயை பரப்பி விட வேண்டும். சில்பாலின் பாயின் மீது 15 கிலோ மணலை சம அளவில் பரப்பி விட வேண்டும். தண்ணீரின் அளவு 10 செ.மீ உயரம் வரை இருக்க வேண்டும். புதிய சாணம் 2 கிலோ (அ) 30 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 1000 கிராமம் சுத்தமான அசோலா விதைகளை தண்ணீரில் போட வேண்டும்.