திருவையாறு, நவ. 6: திருவையாறு வேளாண்மை துறை அலுவலகத்தில் திட்ட பணிகளை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) சிங்காரம் ஆய்வு செய்தார்.அப்போது திருவையாறு வேளாண் அலுவலகம், வயல்வெளிகளில் செயல்படுத்தப்பட்ட மானிய திட்டங்களை ஆய்வு செய்தார். குறிப்பாக நுண்ணீர் பாசன திட்டம் தொடர்பாக பதிவு செய்தல், மதிப்பீடு செய்தல், அனுமதி வழங்கி பணியாணை வழங்கியது. பணிகள் முடித்த விவரம், சம்பந்தப்பட்ட அலுவலர்களின் பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்ய அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.