தஞ்சை அருகே தையல் கடையில் மின்கசிவால் தீவிபத்து

தஞ்சை, நவ. 1: தஞ்சை அருகே நேற்று மாலை திடீரென தையல் கடையில் தீ பிடித்தது. தஞ்சை தெற்கு வீதியில் புதிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மாடியில் நேற்று மாலை திடீரென புகைமண்டலமாக காட்சியளித்தது. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். மேலும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் அங்கிருந்த தையல் கடையில் துணிகளை அயர்ன் செய்தபோது மின்சாரம் கசிந்து தீபிடித்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: