முத்துப்பேட்டை, அக். 27: முத்துப்பேட்டை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பள்ளியமேடு கிராம மக்களுக்கு சேவை அமைப்பினர் வேட்டி, சேலை, சிறுவர்களுக்கு ஆடைகள், ஸ்வீட், பட்டாசுகளை வழங்கினர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பள்ளியமேடு கிராமத்தில் கடந்தாண்டு கஜா புயல் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் சேவை அமைப்பு சார்பில் இந்த கிராமத்தை தேர்வு செய்து அப்பகுதி மக்களுக்கு தீபாவளியை கொண்டாடும் வகையில் வேட்டி, சேலை, சிறுவர்களுக்கு ஆடைகள், ஸ்வீட், பட்டாசுகள் வழங்கப்பட்டது.