தி.மலை கலெக்டருக்கு எதிராக ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர், அக்.25: திருவண்ணாமலை கலெக்டரை கண்டித்து திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களை மிரட்டும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், கலெக்டரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து திருவாரூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வசந்தன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில், பொருளாளர் சுந்தரலிங்கம் உள்பட சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: