நாகை, அக்.25: நுகர்பொருள் வாணிபக் கழகம் நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக நடப்பு காரீப் மார்க்கெட்டிங் 2019-20ம் பருவத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குண்டான விலையை உயர்த்தி வழங்கப்படவுள்ளது. கடந்த 1ம் தேதி முதல் இதற்காக அரசு ஆணை வழங்கியுள்ளது. சன்னரகம் நெல்லிற்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1835, மாநில அரசின் ஊக்கத் தொகை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.70 என்று மொத்த விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1905 ஆகும். பொது ரகம் நெல்லிற்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1815, மாநில அரசின் ஊக்கத் தொகை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.50 மொத்த விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1865 ஆகும். நடப்பு பருவத்தில் மாவட்டத்தில் இயங்கிவரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், மாலை 2.30 முதல் 6.30 மாலை மணி வரை செயல்படும்.