பாபநாசம், அக். 23: கும்பகோணம்- தஞ்சை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென பாபநாசத்தில் நடந்த ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பாபநாசத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம் நடந்தது.
கிளை தலைவர் சுப்பு.தங்கராசன் தலைமை வகித்தார். மதிப்பியல் தலைவர் கந்த.சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் அரிமா துரைசாமி வரவேற்றார்.உதவி செயலாளர் திருவேங்கடம் கடந்த மாத கூட்ட அறிக்கையை வாசித்தார். பொருளாளர் சண்முகம் கடந்த மாத வரவு செலவு அறிக்கையை வாசித்தார்.