சின்னசேலம், அக். 23: சாலைவிதிகளை பின்பற்றி வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று கள்ளக்குறிச்சி போக்குவரத்து எஸ்ஐ தர்மராஜ் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார்.சின்னசேலம் பகுதியில் உள்ள மூங்கில்பாடி சாலை மற்றும் சேலம் மெயின்ரோட்டில் டாடா ஏசி வாகனம் உள்ளிட்டவைகளை சாலை ஓரத்திலேயே நிறுத்தி விட்டு பலமணி நேரம் அவற்றை எடுக்காமல் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்படுகிறது. இதையடுத்து கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் அறிவுரையின்பேரில் கள்ளக்குறிச்சி போக்குவரத்து சப்இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் சின்னசேலம் பஸ்நிலையத்தில் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் கார், ஆட்டோ, டாடா ஏசி வாகனங்களின் டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது கள்ளக்குறிச்சி போக்குவரத்து எஸ்ஐ தர்மராஜ் பேசுகையில், டிரைவர்கள் கட்டாயம் சீருடை அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும். மதுகுடித்து விட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது.