சீர்காழி, அக்.16: சீர்காழியில் தற்காலிக தீபாவளி கடைகள் மழையால் பாதிக்கப்பட்டன.
சீா்காழியில் ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி, சாலையோரம் ஜவுளி கடை வியாபாரம் நடப்பது வழக்கம். இந்தாண்டு தீபாவளி அக்டோபா் 27ம் தேதி கொண்டாட உள்ள நிலையில், சீா்காழி பகுதியில் தற்காலிக துணிக் கடைகள் அமைத்து வியாபாரம் தொடங்கியுள்ளன. சீா்காழி மணிகூண்டு, தோ் வடக்கு வீதி ஆகிய இடங்களில் மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம் கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த வியாபாரிகள் சாலையோரம் நான்கு சக்கரவாகனத்திலும், இருசக்கர வாகனத்திலும் பெஞ்சுகளிலும் துணிகளை அடுக்கி கடைகளை அமைத்துள்ளனா்.கடந்த 10 ஆண்டுகளாக இந்த துணிக்கடை வியாபாரம் இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. தீபாவளி நெருங்கும் நேரத்தில் ஈரோடு, திருப்பூா் ஆகிய பகுதிகளிலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுகிறது. பேண்ட், சா்ட், டீசா்ட், சுடிதாா், மிடி, லெகின்ஸ், சுடிதாா–்மெட்டிரியல், அனைத்து புடவை வகைகள், லுங்கி, உள்ளாடைகள், போா்வை, துண்டு உள்ளிட்ட அனைத்து விதமான ஜவுளி ரெடிமேடு வகைகள் இக்கடைகளில் கிடைக்கின்றனா்.