மயிலாடுதுறை அருகே பைக்கில் சாராயம் கடத்தியவர் கைது

மயிலாடுதுறை அக்.16:மயிலாடுதுறை அருகே பைக்கில் சாராயம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை சீர்காழி பகுதியில் காரைக்காலிலிருந்து சாராய பாக்கெட்டுக்கள் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி விற்பனை செய்வதை தடுப்பதற்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கள்ளச்சாராய வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்த தனிப்படையினர் கைப்பற்றும் கள்ளச்சாராயம் மற்றும் கைது செய்பவர்களை மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு காவல் துறையிடம் கொடுத்து வழக்குப் பதிவு செய்ய சொல்வது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் காலை மயிலாடுதுறை அருகே உள்ள அரும்பாக்கம் மதகடி அருகில் உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வேகமாக சென்ற நபரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், 125 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. வாகனத்தை ஓட்டிவந்த படுகை ராஜாராமன் மகன் ராஜா (22) என்பவரை அழைத்து சென்று மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவில் ஒப்படைத்தனர். அவர்மீது மயிலாடுதுறை அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: