காரைக்கால், அக்.15: காரைக்கால் அரசலாறு மற்றும் திருமலைராஜனாற்றில் மணல் கடத்திய 4 டிராக்டர்களை மாவட்ட வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். காரைக்காலில் உள்ள ஆறுகளில் மணல் அள்ள மாவட்ட வருவாய்த்துறை தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி காரைக்காலில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர், தொழில் அதிபர்கள் மாவட்ட வருவாய் துறையின் அனுமதியின்றி மணல் அள்ளி வருகின்றனர். இதனை மாவட்ட வருவாய்த் துறையினர் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக யாரேனும் புகார் அளித்தால் மட்டுமே வருவாய் துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.