மயிலாடுதுறை, அக்.15: மயிலாடுதுறை அருகே ஆசை வார்த்தைக்கூறி இளம்பெண்ணை கடத்தியதாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மேலஅகலங்கன் ரோட்டு தெருவில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் பத்தாம் வகுப்புவரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இவரது தாயாரும் அதே பகுதியை சேர்ந்த சுதா என்பவரும் நண்பர்கள். அடிக்கடி சுதா வீட்டிற்கு தாயும் மகளும் வந்து செல்வது வாடிக்கை. சுதாவின் தம்பியான சின்னகொக்கூர் வீரமணி மகன் மணிகண்டன் என்பவர் அக்கா வீட்டிற்கு வந்து சென்றபோது மண்கண்டன் அந்த இளம்பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறியுள்ளார்.