எஸ்.ஏரிப்பாளையத்தில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை

பண்ருட்டி, அக். 10: பண்ருட்டி அருகே புதுப்பேட்டையில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி கொலு உற்சவ விழா கடந்த மாதம் துவங்கி தினந்தோறும் பல்வேறு அலங்காரத்தில் சாமி காட்சி அளித்தார். சரஸ்வதி பூஜையை முன்னிட்டு திருவிளக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், பரத நாட்டியத்துடன் அம்பு போடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் பண்ருட்டி அருகே எஸ்.ஏரிப்பாளையத்தில் உள்ள நவக்கிரக அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் உலக நன்மை வேண்டி 108 விளக்கு பூஜை நடந்தது. கடந்த மாதம் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்கப்பட்டு தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. விவசாய நிலங்களில் தானியங்கள் அதிகளவு மகசூல் பெறும் பொருட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: