சாத்தான்குளம், அக்.4: இடையன்குடியில் இருந்து சாத்தான்குளம் வழியாக சென்னை செல்லும் அரசு விரைவு பஸ் தொடர்ந்து 3 நாள்களாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துளளனர். நெல்லை மாவட்டம் இடையன்குடியில் இருந்து சாத்தான்குளம், நெல்லை வழியாக அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. முன்னர் அங்குள்ள ஏஜென்ட் மூலம் இருக்கைகள் புக் செய்யப்பட்டு வந்தநிலையில் தற்போது ஆன்லைன்மூலம் இருக்கைகள் புக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் வழியாக இயக்கப்பட்டு வந்த விரைவு பஸ் எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென கடந்த 3நாட்களாக இயக்கப்படவில்லை. இதனால் சாத்தான்குளம் பகுதியில் இருந்து பஸ்சில் பயணிக்க புக் செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பஸ் வராததால் டிக்கெட் புக்கிங் செய்தவர்கள் நெல்லை சென்று வேறு பஸ்சில் பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.