காரைக்குடி, அக். 4: ஆளும் அதிமுக.வின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கவுள்ள இரண்டு தொகுகளிலும் திமுக அமோக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ தெரிவித்தார். காரைக்குடியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் மகளிரணி உறுப்பினர்கள் சேர்த்தல், உறுப்பினர்கள் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் குணசேகரன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசுகையில், சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர் நிச்சயம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். இரண்டு தொகுதிகளும் தி.மு.க, காங்கிரஸ் கோட்டையாக உள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நாம் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் தி.மு.க.வின் செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டும்.