காஞ்சிபுரம், அக்.4: காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி, கிராம பொதுமக்கள் கலெக்டர் பொன்னையாவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் ஏரிப் பாசனத்தை நம்பி சுமார் 700 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும் இந்த ஏரி சுற்று வட்டார பகுதிகளுக்கு நிலத்தடி நீராதாரமாகவும் இருந்து வருகிறது.தேனம்பாக்கம், தேனம்பாக்கம் காலனி, விஷ்ணு நகர், காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காக, தேனம்பாக்கம் ஏரியின் அருகில் 25க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுக்கின்றனர்.