தூத்துக்குடி, அக்.2: தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்களும், ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி மையமும் பிரிக்கப்பட்டு புதிதாக வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் புதிய வாக்குச்சாவடி அமைப்பதற்கும், வாக்குச்சாவடி இடம் மாற்றம், வாக்குச்சாவடி கட்டிட மாற்றம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசுகையில்: தேர்தல் ஆணையம் 1500க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து புதிய வாக்குச்சாவடிகளை அமைத்திட உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில், கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை 1500க்கு மேல் இருந்ததால் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்களும், ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி மையமும் பிரிக்கப்பட்டு புதிதாக வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.