பியூட்டி பார்லர் பெண் தற்கொலை வழக்கில் மர்மம்

கோவை, அக்.1: சூலூர் பியூட்டி பார்லர் ஊழியர் தற்கொலை வழக்கில் மர்மம் உள்ளதால் உரிய விசாரணை நடத்தக்கோரி அவரது உறவினர்கள் கோவை கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம் கலெக்டர் ராசாமணி தலைமையில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு போயர் இன ஒற்றுமை சங்கம் சார்பில் கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனுவில், சூலூரை சோ்ந்த பத்மநாபன் என்பவரது மகள் சோபனா (25). பாப்பம்பட்டி பிரிவில் உள்ள பியூட்டி பார்லர் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி மர்மமான முறையில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கலெக்டர் அலுவலகம் முன் சோபனாவின் மரணத்திற்கு நீதிகேட்டு வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

*. இதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை சார்பில் மாவட்ட செயலாளர் பாலசிங்கம் அளித்த மனுவில்,

கோவை மாநகராட்சி 40வது வார்டுக்குட்பட்ட ஆவாரம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை சட்டவிதிகளை மீறி 24 மணி நேரமும் கடைகளில் மதுபானம் விற்கப்பட்டு வருகிறது இதனால் பள்ளி கல்லூரி மாணவிகள் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் எனவே இந்த கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.