பெருந்துறை, அக். 1: பெருந்துறையில் 230 கர்ப்பிணி பெண்களுக்கு, சீர் வரிசைகளுடன் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் சார்பில் பெருந்துறை வட்டார அளவில் சமுதாய வளைக்காப்பு விழா பெருந்துறையில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இவ்விழாவில் பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் கலந்து கொண்டு தனது சொந்த செலவில் அறுசுவை உணவு வழங்கினார். விழாவிற்கு பெருந்துறை வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் மோகனவித்யா தலைமை தாங்கினார். சென்னிமலை வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் விஜயலட்சுமிதேவி வரவேற்றார். பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர்.பேபி முன்னிலை வகித்தார்.