மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

பழநி, செப். 26: பழநி நகராட்சி சார்பில் நேற்று மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகராட்சி ஆணையர் நாராயணன் தலைமை வகித்தார். நகராட்சி பொறியாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். டிஎஸ்பி விவேகானந்தன் பேரணியை துவக்கி வைத்தார்.நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில். மழைநீர் சேகரிப்பின் அவசியம், நீர் பயன்பாட்டில் சிக்கனம், மரம் வளர்ப்பதன் அவசியம் உள்ளிட்டவகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பது தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ்கள் கடைக்காரர்கள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் நகராட்சி ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், சுயஉதவிக்குழுவினர் பங்கேற்றனர்.

Related Stories: