திண்டுக்கல்லில் திடீர் மழை

 

திண்டுக்கல், மே 6: திண்டுக்கல்லில் நேற்று மாலை திடீரென பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் தவித்து வரும் நிலையில், ஆங்காங்கே உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதையடுத்து, பொதுமக்கள் தேவையின்றி வெளியில் நடமாட வேண்டாம் என அரசும் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

ஆனால் அனைவரையும் மகிழ்விக்கும் விதமாக ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் நகர் மற்றும் எம்.வி.எம்., கல்லூரி, ரெட்டியபட்டி உட்பட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. அரை மணி நேரம் பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர் காற்று வீச ஆரம்பித்தது. கடந்த சில நாட்களாக வெப்ப அனல் காற்றால் தவித்து வந்த பொதுமக்கள் நேற்று மாலை பெய்த மழையினால் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post திண்டுக்கல்லில் திடீர் மழை appeared first on Dinakaran.

Related Stories: