வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு

ரெட்டியார்சத்திரம், மே 12: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் வட்டாரம் வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரமோகன் வழிகாட்டலின் படி தனியார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 4ம் ஆண்டு மாணவிகள் ரெட்டியார்சத்திரம் தொகுதியில் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தில் பங்குப் பெற்றுள்ளனர். இதன்படி மாணவிகள் ஆதித்யா தேவி, அம்ரிதா, அனன்யா, அர்ச்சனா, ஆயிஷா, பாகிரதி, பவதாரணி, சந்தனா, தர்ஷனா ஆகியோர் தருமத்துப்பட்டி பகுதியில் சென்று அங்குள்ள சுய உதவி குழு பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: