பணம் கேட்டு மிரட்டியவர் கைது

திண்டுக்கல், மே 11:திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(35), கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வெள்ளோடு ரோட்டில் அரசு மருத்துவக் கல்லூரி பிரிவு அருகே அவரது நண்பர் சத்யராஜ் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வேடப்பட்டி அண்ணா நகரை சேர்ந்த ராஜேஷ் கண்ணன்(25) என்பவர் மணிகண்டனிடம் பீர் பாட்டிலை உடைத்து காட்டி மது குடிக்க ரூ.500 கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்து மணிகண்டன் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பணம் கேட்டு மிரட்டியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: