திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சி கூட்டம்

கடலூர், செப். 25: கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட துணை

ஒருங்கிணைப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சி பாசறைக்கூட்டம் வரும் 29ம் தேதி வடலூர், சென்னை சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் எம்.எம். அப்துல்லா கலந்துகொண்டு ஆலோசனை வழங்க உள்ளார். அதுசமயம் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர் ஊராட்சி, வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: