திருவாரூர், செப். 24: திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மருத்துவ துணை செவிலியர் மற்றும் பல்நோக்கு சுகாதார ஊழியர் பணியிடத்திற்கு பதிவு செய்துள்ளவர்கள் வரும் 26ம்தேதிக்குள் தங்களது பதிவு விவரங்களை சரிபார்த்து கொள்ளுமாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கிராம சுகாதார செவிலியர்கள் காலி பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள வர்கள் மாநில உத்தேச பதிவு மூப்பின் படி பரிந்துரைக்கப்பட உள்ளனர். இந்த பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ நிறுவனத்தில் 18 மாத மருத்துவ துணை செவிலியர் பயிற்சி அல்லது பல்நோக்கு மருத்துவ ஊழியர் சான்று அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட துணை செவிலியர் பயிற்சி அல்லது பல்நோக்கு மருத்துவ ஊழியர் சான்று பெற்றிருப்பதுடன் தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலிங்கில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.