தூத்துக்குடி, செப். 24: கிராம சுகாதார செவிலியர் பணியிடத்துக்கு பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடப்பதால் செவிலியர் கல்வித்தகுதியை பதிவு செய்தவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கிராம சுகாதார செவிலியர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தால் பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்யப்படவுள்ளது.