கடலூர், செப். 19: கடலூர் புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அளித்துவரும் நெருக்கடிகளை கண்டித்தும், முற்றாக கைவிட கோரியும் பெருந்திரள் முறையீடு இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகசிகாமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், துணை தலைவர் சீதாபதி கோரிக்கை விளக்க உரையாற்றினார். பல்வேறு சங்க நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், செல்வம், தங்கதுரை வாழ்த்துரை வழங்கினர்.