திருவாரூர், செப்.15: திருவாரூரில் வேளாண் கல்லூரி துவங்க வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு திருவாரூரில் நேற்று மாவட்ட தலைவர் (பொ) ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் அன்பரசு,மாநில செயலாளர்கள் சவுந்தர்ராஜன், பன்னீர் செல்வம் ,மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் மற்றும் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும், தொகுப்பூதியம் ,மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், அவுட்சோர்சிங் முறையினை கைவிட வேண்டும்.