காரைக்கால், செப்.11: காரைக்கால் திருநள்ளாற்றில் ராணுவ வீரர் மனைவி தவறவிட்ட ரூ.20 ஆயிரம் பணத்தை போலீசார் கண்டுபிடித்து உரியவரிடம் வழங்கினர்.காரைக்கால் திருநள்ளாறு சுப்புராயபுரம் பகுதியில் வசிப்பவர் ராணுவ வீரர் விமல்(35). இவரது மனைவி சரண்யா(29). இவர் நேற்று காலை தனது குழந்தையை அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் விடுவதற்காக மொபட்டில் சென்றார். பள்ளி சென்று பார்த்தபோது தான் கொண்டு வந்த பர்ஸ் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, வந்த வழியே மீண்டும் சென்ற பார்த்தபோது, பர்ஸ் கிடைக்கவில்லை. இதனால் கவலையுடன் வீடு திரும்பினார்.