விழிப்புணர்வு முகாமில் தகவல் கொள்ளிடம் அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

கொள்ளிடம் ஜூலை 19: நாகை மாவட்டம் கொள்ளிடம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கமாலுதின் கலந்து கொண்டு மரக்கன்றை நட்டு துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நீர்வள மேம்பாட்டுதிறன் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாணவர்கள் கொள்ளிடம் அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தனர்.

Related Stories: