நீர்வள மேலாண்மை குறித்து ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

நாகை, ஜூலை 18: நாகையில் தேசிய பசுமைப் படை சார்பில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்வள மேலாண்மை குறித்து ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை வகித்தார். இதில் நாகை மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வீடுகளிலும், பள்ளிகளிலும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்தும், மறுசுழற்சி மூலம் நீரை சேமித்தல் குறித்தும் ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் பேசியதாவது:நாகை மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பை செயல்படுத்த வேண்டும், பள்ளிகளில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நீரை சிக்கனமாக பயன்படுத்த மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளி வளாகத்தை பசுமையாக்குதல், பள்ளிகள் முழுவதும் மரக்கன்றுகள் நடுதல், கழிவுநீரை பயன்படுத்தி தோட்டங்களை உருவாக்க வேண்டும் என்றார்.

மயிலாடுதுறை கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், நாகை கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், மாவட்ட கல்வி அலுவலர் வேதரத்தினம், பள்ளி துணை ஆய்வாளர் ராமநாதன் தேசிய பசுமை படை உதவி ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: