காரைக்குடி, ஜூலை 16: காரைக்குடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் சத்யன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக இயக்குநர் சங்கீதாசத்யன் முன்னிலை வகித்தார். செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு நிர்வாக இயக்குநர் அருண் தலைமை வகித்தார். ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் காளிச்சரண் தலைமை வகித்தார். ஒய்ஸ் மென் கிளப் தேவராஜ், முதல்வர் அனில் குமார், துணை முதல்வர் அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர். ராகவேந்திரா பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி செயலாளர் கார்த்திக் வரவேற்றார். முதன்மை தலைமையாசிரியர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.