ஆண்டிபட்டி, ஜூன் 25: ஆண்டிபட்டியில் ஜேஜே நகரைச் சேர்ந்த சேர்மலை மகன் கரிகாலன். நெசவுத்தொழில் செய்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ராதாகிருஷ்ணன் (40). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நாகஜோதி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். இவர்கள் இருவரும், கரிகாலனிடம் 9 சென்ட் நிலத்தை தங்களுடைய நிலம் எனக் கூறி ரூ. 19 லட்சத்து 35 ஆயிரத்திற்கு பேசி முன்பணமாக ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது.