ஆம்பூர், ஜூன் 21: ஆம்பூர் அருகே கோயில் விழா தகராறில் தம்பதியை தாக்கி, வாழை மரங்கள் மற்றும் வீட்டை சூறையாடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கதவாளம், அரங்கல் துருகம், பார்சனப்பள்ளி, மோதகப்பல்லி ஊராட்சிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம், பாட்டை சாரதி அம்மன் கோயிலில் நடந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். அப்போது, கோயில் எதிரே உள்ள விளைநிலத்தில் சிலர் நடனமாடியதாகவும், வயல்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதைப்பார்த்த நில உரிமையாளர் கோவிந்தசாமி(64), அவரது மனைவி சகுந்தலா(60) ஆகியோர் அவர்களிடம் தட்டிக்கேட்டனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.