நீடாமங்கலம்,ஜூன்19: நீடாமங்கலம் அருகில் 5 ஆண்டுகளாக து£ர்ந்துள்ள பாசன வாய்க்கால் தூர்வாராததால் 276 ஏக்கர் நிலங்களை சாகுபடி செய்யமுடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்திலிருந்து தஞ்சை செல்லும் வழியில் கொண்டியார் சட்ரஸ் உள்ளது.இங்கு தொடங்கும் மன்னப்பன் பாசன வாய்க்கால் மதகு கடந்த 5 ஆண்டுகளாக தூர்ந்து தூர் வாரமுடியாதநிலையில் உள்ளது.இந்த இடத்தில் தூர் வார வேண்டுமென்றால் எந்த வாகனமும் செல்ல முடியாத நிலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளது.இதை எந்த அதிகாரியும் கண்டு கொள்வதில்லை.இந்த மன்னப்பன் பாசன வாய்க்கால் மேலபூவனூர் வரை பாசன வாய்க்காலாகவும்,பிறகு கொண்டியாற்றில் கலந்து வடிகாலாகவும் பிறகு இராயபுரம் வரை பாசன வாய்க்காலாக சென்று அங்குள்ள பாமனியாற்றில் வடிகாலாக கலக்கிறது.இந்த வாய்க்கால் சுமார் 5 கி.மீட்டர் வரை செல்கிறது.இந்த வாய்க்கால் மேல பூவனூர் வரை சுமார் 276 ஏக்கருக்கு பாசனநீர் கொடுக்கும்.