திருவாரூர், ஜூன் 19: திருவாரூரில் நேற்று நடைபெற்ற வருவாய்த்துறையின் ஜமாபந்தி கணக்குகள் நிகழ்ச்சியில் 28 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் தொடர்பான உத்தரவினை சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜெயதீபன் வழங்கினார்.திருவாரூர் மாவட்டத்தில் 1428ம் வசலிக்கான வருவாய் துறையின் ஜமாபந்தி கணக்குகள் முடித்தல் நிகழ்ச்சியானது கடந்த 6ம்தேதி முதல் துவங்கி அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நேற்று வரை நடைபெற்றது. அதன்படி மன்னார்குடி தாலுகா அலுவலகத்தில் கலால் உதவி ஆணையர் தலைமையிலும், நன்னிலத்தில் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் தலைமையிலும், திருவாரூரில் டி.ஆர்.ஒ தலைமையிலும், குடவாசலில் ஆர்.டி.ஒ தலைமையிலும், வலங்கைமானில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தலைமையிலும், திருத்துறைபூண்டியில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும், நீடாமங்கலத்தில் கலெக்டர் ஆனந்த் தலைமையிலும், கூத்தாநல்லூரில் மன்னார்குடி ஆர்டிஒ தலைமையிலும் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியானது துவங்கியது.