செய்யூர், ஜூன் 19: செய்யூர் தொகுதியில் ஜமாபந்தி முகாம் கடந்த மே மாதம் 29ம் தேதி தொடங்கி ஜூன் 4ம் தேதி வரை நடந்தது. இதில் செய்யூர் தொகுதி மக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா, ஸ்மார்ட், ஆதார் கார்டு, முதியோர், ஊனமுற்றோர் உதவி தொகை, உழவர் காப்பீடு திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டன. அதில், 500க்கும் மேற்பட்ட மனுக்களில் 251 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.